அனைவருக்கும் வணக்கம்.
உழவு தலைப்பை முதலில் வைத்திருக்க வேண்டும் என்று விழாத் தலைவர் கூறினார்
மேலிருந்து பார்த்தால் நான் தான் கடைசி.
கீழிருந்து பார்த்தால்
நான் தான் முதல்
உலகின் முதல் தொழிலும் உழவு தான்.
உலகின் கடைசித் தொழிலும் உழவு தான்
பொள்ளாச்சி கம்பன் கலை மன்றத்தின் 352 வது நிகழ்வு.
திரு தர்மராஜ் அவர்களின் நினைவு
இந்த கவிச் சமூகம்
திரு சண்முகம் ஐயா
அவர்களின் பின் செல்லும்
தேநாவின் தேன் நாவும் பேனா தான்.
தே நாவின் பேனாவும் தேன் தான் அவரின் அறிமுக உரைக்கு நன்றி.
நல்ல வார்த்தைகளால் பின்னி வரவேற்புரை வழங்கிய சென்னியப்பன் அண்ணாவுக்கும் நன்றி.
பூப்போன்று பா எழுதும் மதிப்பிற்குரிய திரு மா.பாபு விழாத் தலைவர் அவர்களுக்கு வணக்கமும் நன்றியும்
தன் மணிமொழியால் நன்றியுரை சொல்லப் போகும் திருமதி மணிமொழிக்கும் வணக்கமும் நன்றியும்
வள்ளுவமே வாழ்வியலாய் வாழ்வியலே வள்ளுவமாய் என்ற வள்ளுவர் தின கவியரங்கத்தில் எனக்கு கொடுக்கப்பட்ட தலைப்பு உழவு
12 மாதங்களும் உழவுத் தொழில் வேண்டும் என்று நினைத்துத்தான் 12 தலைப்புகள் வைத்தீர்களா?
அதில் 12வது தலைப்பாக உழவை வைத்தீர்களா?
இந்த வாழ்வில் தன் சுற்றுப்பாதையில் இருந்து விலகிச் செல்லும் நபர்களை எல்லாம் இரண்டடி கொடுத்து மீண்டும் பழைய பாதையில் இயங்க வைத்துக் கொண்டிருக்கிறது இந்த வள்ளுவம்
உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம் என்றான். பாரதி அதில் கூட உழவை முதலாவதாக வைத்தான்.
வள்ளுவர் ஒரு படி மேலே போய்
உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் மற்றெல்லாம்
தொழுதுண்டு பின் செல்வார் என்றார்
ஒரு முறை சர்தார் வல்லபாய் பட்டேல் வெளிநாடு சென்றிருந்தபோது அங்கிருந்தவர்கள் எல்லாம் கேட்டார்களாம் உங்களுடைய கல்ச்சர் என்னவென்று கேட்டார்களாம்.
பட்டேல் அக்ரி கல்ச்சர் என்றாராம்.
அதிக பொருளுக்கு குறைந்த வரி விதித்தவர் திருவள்ளுவர் தான்.
அவரே சிறந்த பொருளாதார நிபுணர்
குறள் வள்ளுவருடையது.
குரல் என்னுடையது.
உங்கள் மனநலத்தில் கவிதை நாறங நடப் போகிறேன் அதில் இருக்கும் களைகளை போகி ஆக்கிடுங்கள்.
நல்லவற்றை அறுவடை செய்து உங்கள் மகிழ்ச்சி பொங்கலில் சேர்த்துக் கொள்ளுங்கள்
உங்களின் கைதட்டல் எனக்கு கரும்பு.
ஏரோபிளேன் உற்பத்தி செய்தாலும், பின்னூசி உற்பத்தி செய்தாலும் ஏர்தான் அனைத்து தொழிலுக்கும் முன்னத்து ஏர்.
பசி போக்குவதால் உழவுத் தொழிலில் துன்பம் கூட இன்பம் தான்.
அச்சுத் தொழிலாக இருந்தாலும், ஆணித் தொழிலாக இருந்தாலும் உழவு தான் அச்சாணி என்று எழுத்தாணி கொண்டு சொன்னான் வள்ளுவன் ஞானி
வரம் தா என்று கேட்டாலும் தொழுதாலும் இறைவன் வரம் தருவாரா என்று தெரியாது.
ஆனால் கேட்காமலேயே தாவரங்கள் மூலம் வரம் தருபவன் உழவன் தான்.
அவனே தொழத் தகுதியானவன்
அத்தனை தொழில்களையும் தன் குடையின் கீழ் வைத்திருக்கும் அரசு.
அந்த அரசையே தன் குடையின் கீழ் வைத்திருப்பான் உழவன்
பிறரிடம் தன் கை மேல் நோக்கி வாழ மாட்டான் உழவன்.
அதே நேரம் தன்னிடம் வரும் மேல்நோக்கும் கைகளுக்கு தன் கைகள் கீழ்நோக்கி உதவிடுவான்.
நமக்கு நாமே திட்டத்தின் விதை உழவன்
எல்லா பற்றையும் கைவிட்டு விட்டதாக கூறிய பழைய துருவிகளும்,
எல்லாப் பற்றையும் விட்டு விட்டதாக கூறி நிறைய வரவுகளை பற்று வைத்துக் கொண்டிருக்கும் புதிய துறவிகளும் காங்கிரஸ் கட்சியின் சின்னத்தை எதிர்பார்த்து தான் வாழ்ந்தாக வேண்டும்
மண்ணாங்கட்டி மண்ணாகும் வரை உழு அது பொன்னாகும்.
உரம் இன்றி பயிர் வளரும்.
ஒன்றை சிறப்பாக செய்தால் இன்னொன்று தேவை இருக்காது.
பயிற்சியும் முயற்சியும் உழவனின் இரு கண்கள் மட்டுமல்ல... இரு காளைகளும் கூட..
உழ முடியாதவன் உரம் இடலாம். களை எடுப்பதும், நீர் பாய்ச்சுவதும் நல்லது.
அதைவிட நல்லது அந்த பயிரை உயிர் போல் காப்பது.
எப்படி வேண்டுமானாலும் சமையுங்கள் அன்போடு பரிமாறுங்கள் என்பதைப் போல எப்படி வேண்டுமானாலும் பயிர் வளர்த்தாலும் அதை உயிர் போல் காத்திடுவான் உழவன்
வீட்டில் இருக்கும்போது காடு
வா வா என்று அழைக்க வேண்டும்.
வீடு (மனைவி) போ போ என்று சொல்ல வேண்டும்
காட்டில் இருக்கும் போது வீடு வா வா என்று அழைக்க வேண்டும்.காடு போ போ என்று சொல்ல வேண்டும்.
நாள்தோறும் கவனிக்காவிட்டால் வீடும் காடும் விளைச்சலை தராது
வேறு தொழில் செய்பவர்கள் வாழ வழி இல்லை என்று சோம்பலாய் இருக்கலாம்.
நிலம் வைத்திருப்பவன் மற்றவர்களுக்கெல்லாம் சாம்பலா இருக்க வேண்டும்
சோம்பலை தன்னோடு வைத்திருந்தால் பூமியாளும் இல்லாளும் சேர்ந்து கேலி செய்வார்கள்.
உலகின் அட்சய பாத்திரம் உழவு.
உழவன் சேற்றில் கை வைத்தால்தான் நாம் சோற்றில் கை வைக்க முடியும்
நான் இப்போது கவிதையை கீழே வைக்க விட்டாலும் உங்களால் சோற்றில் கை வைக்க முடியாது.
உணர்வில் சந்தித்தோம் இனி உணவில் சந்திப்போம்.
இத்தனை உழைப்புகளும் ஒரு சாண் வயிற்றுக்கு தான் என்பது பழைய மொழி.
இத்தனை பாடுகளும் ஒரு முழம் வயிறு(தொப்பை) உள்ளவர்களுக்கும் தான்
கடைசியாய் ஒன்று உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்.
வீணில் உண்டு களி(ழி)த்திருபோரை
வாக்கிங்காவது போகச் சொல்வோம்.
எல்லோருக்கும் பொங்கல் வாழ்த்துக்கள் நன்றி